பொருள்புதிது இணையதளம்: ஒரு வேண்டுகோள்

தமிழ் இலக்கியத்துக்கு ஒரு புதிய அணியாக, பொருள் புதிது.காம் என்ற இணையதளம் வெளியாகி வருகிறது. நமது தோழமைத் தளமான இத்தளம் குறித்த அறிவிப்பு இது...
நல்ல நூல்கள் சமுதாயத்தின் திசைகாட்டிகள் என்று சொல்லப்படுவதுண்டு. பஞ்சிலிருந்து நூல் நூற்று அதனைக் கொண்டு தனது இடையறா உழைப்பால் துணியை நெசவு செய்யும் தொழிலாளி போல, தமது  எண்ணங்களை எழுத்தாக்கி சமுதாயத்துக்கான அணியாக, நூலாக நெசவு செய்பவர்கள் எழுத்தாளர்கள். 

எழுத்தாளர்களின் படைப்புகள் அச்சு வாகனம் ஏறும்போதுதான் அவை தேவையானோருக்குப் பயன்படும் சாதனமாக அமைய முடியும்.அப்போதுதான் அவை காலம் கடந்த ஆவணமாகும். அதற்கான வாய்ப்புகள் அனைவருக்கும் அமைவதில்லை. இந்நிலையை மாற்ற வேண்டும் என்பதற்கானது எமது பதிப்பக முயற்சி.

இன்று மகாகவி பாரதி உலக அளவில் தமிழ் மொழியின் அடையாளமாகவே மாறி இருக்கிறார். ஆனால், அவர் வாழ்ந்த காலத்தில் அவரது எழுத்துகள் அதற்குரிய முழுமையான மதிப்பைப் பெற்றதில்லை. இன்றும்கூட அவரது எழுத்துத் திறனின் பூரணத்தை தமிழகம் உணர்ந்துள்ளதா என்பது சந்தேகமே. அதுபோலவே, தகுதியற்ற பலர் வேறு காரணிகளால் எழுத்தாளராகப் பிராபல்யம் அடைவதும், திறமையுள்ள நூல் வல்லவர்கள் மறைந்து கிடப்பதும் இம்மண்ணில் தொடர்ந்து நிகழ்கிறது.

இதன் காரணமாக, நமது நூலக அடுக்குகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளிடையே நல்ல நூல்களை அணுகுவதே சவாலான செயலாக மாறிவிட்ட அவலச் சூழலில் நாம் வாழ்கிறோம். வாசிப்பவர்கள் அருகிவரும் காலத்தில், தமக்குத் தாமே மேடை அமைத்து மெச்சிக் கொள்வோர் பெருகிவரும் வறட்டுச் சூழலில், நமது மொழிக்கு நலம் விளைக்கும் அருஞ்செயலை நிகழ்த்த வேண்டும் என்ற விருப்பமே ‘உலகெலாம்’  பதிப்பகமாக உதயமாகி இருக்கிறது.

சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர் சரிதத்தை பெரிய புராணமாக ஆக்கிட விரும்பி சிதம்பரம் கோயிலுறை ஈசனிடம் இறைவாக்குக் கேட்டபோது “உலகெலாம்” என்று இறைவனே முதலடியை எடுத்துக் கொடுத்தார். அந்த முதலடியையே எமது பதிப்பகத்தின் பெயராகக் கொள்கிறோம்.

எமது உலகெலாம் பதிப்பகத்துக்கு ஓர் இணைய முகவரியாக இந்த ‘பொருள் புதிது’ இணையதளம் செயல்படுகிறது. இதில் நாம் படிக்க வேண்டிய நூல்கள் கருவூலமாக சேமிக்கப்படுகின்றன. தவிர பாரதி இலக்கியத்தை முழுமையாகத் தொகுக்கும் பணியும் இங்கு நிகழும். இத்தளத்தில் வெளியாகும் தொடர்கள் பிற்பாடு நூல் வடிவம் பெறுகின்றன.

உங்கள் மதிப்பு மிகுந்த ஆலோசனைகளும் நல்லாதரவும் எமது பதிப்பகத்தையும் இணையதளத்தையும் செம்மைப்படுத்தும். தமிழுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் பல நூல்களை வெளியிட, அன்பர்களின் ஆதரவும் இறையருளும் துணை புரியட்டும்.

காண்க: பொருள்புதிது.காம்

யுவ காண்டீபம் – மின்னிதழ்கள்

2020 ஆண்டு இதழ்கள்

2021 ஆண்டு இதழ்கள்

தவப் புதல்வர்கள் (ஆவணி)

-ஆசிரியர் குழு

 

ஸ்ரீ சார்வரி வருடம், ஆவணித் திங்கள் 

(17.07.2020 – 16.09.2020)


ஆன்றோர் திருநட்சத்திரங்கள்:

மறைஞானசம்பந்தர்     (ஆவணி 05 – உத்திரம் – 21.08.2020)

நாராயணகுரு ஜெயந்தி (ஆக. 22, 1855)

திருமுருக கிருபானந்த வாரியார் (ஆக. 22, 1906)

குலச்சிறை நாயனார் (ஆவணி 10 – அனுஷம் – 26.08.2020)

குங்கிலியக்கலய நாயனார் (ஆவணி 12 – மூலம் – 28.08.2020)

ஸ்ரீ ராகவேந்திரர் (ஆவணி 19 – கிருஷ்ணபக்‌ஷம், துவிதியை திதி- 04.09.2020)

ரியவாச்சான் பிள்ளை (ஆவணி 25 – ரோகிணி – 10.09.2020)

செருத்துணை நாயனார் (ஆவணி 29 – பூசம் – 14.09.2020)

புகழ்த்துணை நாயனார் (ஆவணி 15 – ஆயில்யம் – 15.09.2020)

அதிபத்த நாயனார் (ஆவணி 15 – ஆயில்யம் – 15.09.2020)

இளையான்குடிமாற நாயனார் (ஆவணி 31 -மகம் – 16.09.2020)

***


சான்றோர் – மலர்வும் மறைவும்


மதன்லால் திங்ரா
(பலிதானம்: ஆக. 17)

தீரர் சத்தியமூர்த்தி
(பிறப்பு: ஆக. 19)

ஜீவானந்தம்
(பிறப்பு: ஆக. 21)

பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார்
(பிறப்பு: ஆக. 24)

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை
(மறைவு: ஆக. 24)

சர்தார் வேதரத்தினம் பிள்ளை
(மறைவு: ஆக. 24)

தண்டபாணி தேசிகர்
(பிறப்பு: ஆக. 27)

வீரன் பூலித்தேவன்
(பிறப்பு: செப். 1)

தாதாபாய் நௌரோஜி
(பிறப்பு: செப். 4)

வ.உ.சிதம்பரம் பிள்ளை
(பிறப்பு: செப். 5)

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
(பிறப்பு: செப். 5)

ஔவை துரைசாமி
(மறைவு: செப். 5)

மகாகவி பாரதி
(மறைவு: செப். 11)

வினோபா பாவே
(பிறப்பு: செப்.௦ 11)

ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை
(பிறப்பு: செப். 15)

மோக்‌ஷகுண்டம் விஸ்வேஷ்வரையா(பிறப்பு: செப். 15)

இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி

(பிறப்பு: செப். 16)

தவப் புதல்வர்கள் (ஆடி)

-ஆசிரியர் குழு

ஸ்ரீ சார்வரி வருடம், ஆடித் திங்கள் 

(16.07.2020 – 16.08.2020)



ஆன்றோர் திருநட்சத்திரங்கள்:

மூர்த்தி நாயனார்
(ஆடி 01 – கார்த்திகை- 16.07.2020)

புகழ்ச்சோழ நாயனார்
(ஆடி 01 – கிருத்திகை- 16.07.2020)

கூற்றுவ நாயனார்
(ஆடி 04 – திருவாதிரை- 19.07.2020)

அன்னை சாரதாதேவி
(ஜூலை 20)

ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்
(ஆடி 09 – பூரம் – 24.07.2020)

துளசிதாசர்
(ஆக. 4)

பெருமிழலைக் குறும்பர் நாயனார்
(ஆடி 11 – சித்திரை – 26.07.2020)

சுந்தரமூர்த்தி நாயனார்
(ஆடி 13 – சுவாதி – 28.07.2020)

சேரமான் பெருமாள் நாயனார்
(ஆடி 13 – சுவாதி – 28.07.2020)

கலியனார் நாயனார்
(ஆடி 15 – கேட்டை – 30.07.2020)

கோட்புலியார் நாயனார்
(ஆடி 15 – கேட்டை – 30.07.2020)

ஆளவந்தார்
(ஆடி 18 – உத்திராடம் – 02.08.2020)

பட்டினத்தார்
(ஆடி 18 – உத்திராடம் – 02.08.2020)

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
(மறைவு: ஆக. 16)

ரக்‌ஷா பந்தன் விழா
(ஆடி 19 பௌர்ணமி – 03.08.2020)

காயத்ரீ ஜெபம்

(ஆடி 20 – அவிட்டம் – 04.08.2020) 


***


சான்றோர் – மலர்வும் மறைவும்:

டி.வி.ராமசுப்பையர்
(மறைவு: ஜூலை 21)

முத்துலட்சுமி ரெட்டி
(பிறப்பு: ஜூலை 30) (மறைவு: ஜூலை 22)

பாலகங்காதர திலகர்
(பிறப்பு: ஜூலை 23) (மறைவு: ஆக.1)

சுப்ரமணிய சிவா
(மறைவு: ஜூலை 23)

சந்திரசேகர ஆசாத்
(பிறப்பு: ஜூலை 23)

சோமசுந்தர பாரதியார்
(பிறப்பு: ஜூலை 27)

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
(பிறப்பு: ஜூலை 28)
ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
(மறைவு: ஜூலை 29)

சர்தார் உத்தம் சிங்
(பலிதானம்: ஜூலை 31)

தீரன் சின்னமலை
(பலிதானம்: ஆடி 18)

ரவீந்திரநாத் தாகூர்
(மறைவு: ஆக. 7)

தேவி அகல்யாபாய்
(மறைவு: ஆக. 13)

மகரிஷி அரவிந்தர்
(பிறப்பு: ஆக. 15)

சுதந்திர தினம்
(ஆகஸ்ட் 15, 1947)

தயானந்த சரஸ்வதி சுவாமிகள் 
(பிறப்பு: ஆக. 15, 1930)

தவப் புதல்வர்கள் (ஆனி)

-ஆசிரியர் குழு

சுவாமி விவேகானந்தர்

ஸ்ரீ சார்வரி வருடம், ஆனித் திங்கள் 

(15.06.2020 – 15.07.2020)

 

ஆன்றோர் திருநட்சத்திரங்கள்:

ஏயர்கோன் கலிக்காம நாயனார் (ஆனி 01 – ரேவதி – 15.06.2020)

மாணிக்கவாசகர் (ஆனி 11 – மகம் – 25.06.2020)

அமர்நீதி நாயனார் (ஆனி 12 – பூரம் – 26.06.2020)

பெரியாழ்வார் (ஆனி 16 – சுவாதி – 30.06.2020)

ஸ்ரீ நாதமுனிகள் (ஆனி 18 – அனுஷம் – 02.07.2020)

அருணகிரிநாதர் (ஆனி 20 – மூலம் – 04.07.2020)

வியாச பௌர்ணமி (ஆனி 21 -05.07.2020)

சுகப்பிரம்ம ரிஷி(ஆனி 22 – உத்திராடம்- 06.07.2020)

சுவாமி சிவானந்தர்(முக்தி தினம்: ஆனி 30- அஸ்வினி – 14.07.2020)

***

சான்றோர் – மலர்வும் மறைவும்:


விஸ்வநாத தாஸ்
(பிறப்பு: ஜூன் 16)

சித்தரஞ்சன் தாஸ்
(மறைவு: ஜூன் 16)

ஜான்சிராணி லட்சுமிபாய்
(பலிதானம்: ஜூன் 17)

வீர வாஞ்சிநாதன்
(பலிதானம்: ஜூன் 17)

பி.கக்கன்
(பிறப்பு: ஜூன் 18)

டாக்டர் ஹெட்கேவார்
(மறைவு: ஜூன் 21)

சியாம் பிரசாத் முகர்ஜி
(பிறப்பு: ஜூலை 6) 
(பலிதானம்: ஜூன் 23) 

ராணி துர்காவதி
(பலிதானம்: ஜூன் 24)

கண்ணதாசன்
(பிறப்பு: ஜூன் 24)

ம.பொ.சிவஞானம்
(பிறப்பு: ஜூன் 26)

பிரசாந்த் சந்திரா மகலனோபிஸ்
(பிறப்பு: ஜூன் 29) (மறைவு: ஜூன் 28)

தாதாபாய் நவ்ரோஜி
(மறைவு: ஜூன் 30)

சுவாமி விவேகானந்தர்
(மறைவு: ஜூலை 4)

இரட்டைமலை சீனிவாசன்
(பிறப்பு: ஜூலை 7)

மறைமலை அடிகள்
(பிறப்பு: ஜூலை 15)

கர்மவீரர் காமராஜர்
(பிறப்பு: ஜூலை 15)